ஆடு மேய்க்கும் பட்டதாரி இளைஞனாக பிருத்விராஜ்... ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!


ஆடு மேய்க்கும் பட்டதாரி இளைஞனாக பிருத்விராஜ்... ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
x

நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டைரக்டர் பிளஸ்சி இயக்கி உள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கபட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஆடு மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் ஆடு மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான், சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது. தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். அதில் ஆடு ஜீவிதம்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி உலகமெங்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story