போலீசில் ஆஜராக பிரபல நடிகைக்கு கோர்ட்டு உத்தரவு


போலீசில் ஆஜராக பிரபல நடிகைக்கு கோர்ட்டு உத்தரவு
x

தமிழில் பிரபுதேவாவுடன் தேவி 2 படத்தில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி. வீரமே வாகைசூடும் படத்தில் விஷால் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார். டிம்பிள் ஹயாதிக்கும் ஆந்திர போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே என்பவருக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பானது.

போலீஸ் அதிகாரியின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்ததுடன் அதில் தனது காரை பின்னால் எடுத்து மோதி சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் புகார் அளித்தார்.

இதையடுத்து டிம்பிள் ஹயாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்ததுடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டார்.


Next Story