'காந்தாரா' படத்தின் 2-ம் பாகம் எடுக்க முடிவு


காந்தாரா படத்தின் 2-ம் பாகம் எடுக்க முடிவு
x

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும் என படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியுள்ளார்.

இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து வந்தது. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, "காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்துக்கு முந்தைய காலத்து கதையாகவோ அது இருக்கும். ரிஷப் ஷெட்டியுடன் கதை குறித்து விரைவில் விவாதிக்கப்படும்'' என்றார்.


Next Story