திரைப்பட தொழிலாளர் சம்மேளன தேர்தல்: ஆர்.கே.செல்வமணி, தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி


திரைப்பட தொழிலாளர் சம்மேளன தேர்தல்: ஆர்.கே.செல்வமணி, தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி
x

தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதையடுத்து 2023-26-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல், வருகிற 23-ந்தேதி சென்னை வடபழனியில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு சபரிகிரிசன், தினா, மோகன மகேந்திரன், தவசிராஜ், மாரி ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பொறுப்புக்கு ராமலிங்கம், புருஷோத்தமன், சாஜிதா, ராஜ ரத்னம், ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். வேட்புமனு பரிசீலனைக்கு பின்னர் தகுதியான இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 13-ந்தேதி வெளியிடப்படுகிறது. 23-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் நடக்கிறது.


Next Story