முதுமலை காட்டில், 30 நாட்கள்


முதுமலை காட்டில், 30 நாட்கள்
x

புதுமுகங்கள் நடித்த ‘பருந்தாகுது ஊர்குருவி" என்ற படத்தின் படப்பிடிப்பு, முதுமலை காட்டில் 30 நாட்கள் நடந்தது.

அதில் விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர், ஈ.ராமதாஸ், காயத்ரி அய்யர் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர்.

அந்த அனுபவம் பற்றி டைரக்டர் தனபாலன் கோவிந்தராஜ் கூறும்போது, "படப் பிடிப்பு நடந்த இடத்தில்தான் ஒரு சிறுத்தை புலி 4 பேர்களை கடித்தது. எனவே 30 நாட்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தினோம்" என்றார்.

இந்தப் படத்தை ஈ.ஏ.வி. சுரேஷ், சுந்தரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.


Next Story