'நான் ஈ' 2-ம் பாகம் எடுக்க விரும்பும் நானி


நான் ஈ 2-ம் பாகம் எடுக்க விரும்பும் நானி
x

தமிழில் வெப்பம் படத்தில் நடித்து பிரபலமானவர் நானி. தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் குவித்த நான் ஈ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தற்போது தசரா படத்தில் நடித்து இருக்கிறார்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடேலா டைரக்டு செய்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நானி அளித்துள்ள பேட்டியில், "சில படங்கள் பான் இந்தியா படங்களாகின்றன. பாகுபலி 2-ம் பாகத்தை பான் இந்தியா படம் என்பேன். தசரா பல மொழிகளில் வெளியாகிறது. நிலக்கரி தொழிலாளர்கள் வாழ்க்கைதான் தசரா படம். 1980 கால கட்ட கதை என்பதால் படப்பிடிப்பில் கஷ்டப்பட்டு நடித்தோம்.

படப்பிடிப்பில் கேரவன் உள்பட எங்கும் தூசியாகவே இருந்தது. கீர்த்தி சுரேசுக்கு முக்கியமான கேரக்டர். அவருக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. கமர்ஷியல் படங்களை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். நிறைய இரண்டாம் பாகம் படங்கள் வருகின்றன. நான் நடித்த நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது'' என்றார்.


Next Story