"குடிக்க தண்ணீர்கூட இல்லை" - சில மணி நேரம் ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் ... ராதிகா ஆப்தே ஆவேசம்


குடிக்க தண்ணீர்கூட இல்லை - சில மணி நேரம் ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் ... ராதிகா ஆப்தே ஆவேசம்
x

விமான நிலையத்தின் பெயரை ராதிகா ஆப்தே தெரிவிக்கவில்லை.

மும்பை,

விமான நிலையம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் என பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் , .

இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். 10.15 மணியைக் கடந்தும் விமானம் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைத்தனர். பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை.

நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர் . குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்ற விமான நிலையத்தின் பெயர் , விமானத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை ராதிகா ஆப்தே அந்த பதிவில் தெரிவிக்கவில்லை.

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கத்ரீனா கைப், ராதிகா ஆப்தே, அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story