ராட்சசனை மிஞ்சிவிட்டதா? - 'போர் தொழில்' படம் குறித்து விஷ்ணு விஷால் கேள்வி


ராட்சசனை மிஞ்சிவிட்டதா? - போர் தொழில் படம் குறித்து விஷ்ணு விஷால் கேள்வி
x

'போர் தொழில்' திரைப்படம் ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன், தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'போர் தொழில்' திரைப்படம் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'போர் தொழில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்த படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அசோக் செல்வன், "மச்சி.. அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்! நீயே பாத்துட்டு சொல்லு.. நன்றி டா, நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story