ரிஷப் பண்ட் கார் விபத்து குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தலா பதிவு...!


ரிஷப் பண்ட் கார் விபத்து குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தலா பதிவு...!
x

ரிஷப் பண்ட் கார் விபத்து ; நடிகை ஊர்வசி ரவுத்தலா பிரார்த்தியுங்கள் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மும்பை

தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார்.

பலரும் அவரை கேலி மற்றும் அவதூறு செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர். இதற்கு ஊர்வசி ரவுத்தலா விளக்கம் அளித்து இருந்தார்.

வதந்திகளை பரப்பி என்னை கேலி செய்கிறார்கள். எதையும் முழுமையாக விசாரிக்காமல் நம்பிவிடும் போக்கு சரியல்ல. கிரிக்கெட் வீரர்களோடு நடிகர், நடிகைகளை ஒப்பிடுவது முறையல்ல. அவர்கள் நாட்டுக்காக விளையாடுவதால் மதிக்கப்படுகின்றனர்" என கூறினார்.

இந்த் நிலையில் ரிஷப் பண்ட் இன்று விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப் பண்டின் கார் விபத்து செய்திக்குப் பிறகு, மீண்டும் ஊர்வசி ரவுத்தலா பற்றி விவாதிக்கப்படுகிறது.

பண்டின்ன் விபத்துக்குப் பிறகு, ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். ஊர்வசி தன் பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அதனுடன் இதயத்தின் எமோஜியையும் வைத்து, ஹேஷ்டேக்கில் #Love என்றும் குறிப்பிட்டு உள்ளார். இது ஊர்வசியின் தற்செயலான இடுகை என்றாலும், இப்போது சமூகவலைதளத்தில் இந்த இடுகையை பண்டுடன் இணைத்தே விமர்சிக்கப்படுகிறது.




Next Story