எனக்கு எதிராக வதந்திகள் - நடிகை சார்மி கோபம்


எனக்கு எதிராக வதந்திகள் - நடிகை சார்மி கோபம்
x

எனக்கு எதிராக வரும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என நடிகை சார்மி என்று கூறியுள்ளார்.

தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகையான சார்மி பிரபல டைரக்டர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன.

விஜய்தேவரகொண்டா நடிக்க, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் சார்மி பல கோடி ரூபாய் செலவில் தயாரித்த லைகர் படம் சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. இதனால் அதிர்ச்சியான சார்மி சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

லைகர் தோல்விக்கு காரணம் சார்மி என்றும், பெயருக்கு பூரி ஜெகன்னாத்தை டைரக்டராக வைத்துக்கொண்டு படத்தை சார்மிதான் இயக்கினார் என்றும் வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பின. லைகர் தோல்விக்கு நஷ்டஈடு கொடுக்கிறார்கள் என்றும், அடுத்த படமான ஜனகனமன படத்தை கைவிட்டு விட்டனர் என்றும் தகவல்கள் பரவின.

இதையடுத்து மீண்டும் சமூக வலைத்தளம் பக்கம் வந்து சார்மி வெளியிட்டுள்ள பதிவில், ''வதந்திகள். வதந்திகள் என்னை பற்றியும், பூரி ஜெகன்னாத் பற்றியும் வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இதனை யாரும் நம்ப வேண்டாம். பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு இரங்கல்" என்று கூறியுள்ளார்.


Next Story