விஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் வடிவேலு வராத காரணம்... மன்சூர் அலிகான் பேட்டி..!


விஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் வடிவேலு வராத காரணம்... மன்சூர் அலிகான் பேட்டி..!
x

விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நடிகர் மன்சூர் அலிகான் அவர் அருகிலேயே இருந்தார்.

சென்னை,

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இரவு 7 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நடிகர் மன்சூர் அலிகான் அவரின் அருகிலேயே இருந்தார். இதுகுறித்த விடியோக்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'இரண்டு மூன்று வருடங்களாக உடல் ரீதியாக மிகுந்த துயரத்தை அனுபவித்த அவர் இறைவனடி சேர்ந்தது நல்ல விஷயமாகத்தான் அனைத்து மக்களும் ஆத்மார்த்தமாக நினைத்திருப்பார்கள். அந்தவகையில் தான் நானும் சென்று அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்' என்று கூறினார்.

மேலும் விஜயகாந்த்தின் இறப்பிற்கு நடிகர் வடிவேலு வராத காரணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'மன்னிக்கவும், நான் அதை சொல்ல விரும்பவில்லை. கேப்டன் விஜயகாந்த் இனம், மொழி ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட ஒரு மனிதர்' என்று தெரிவித்தார்.


Next Story