கதை திருட்டு விஷயம் தெரிந்ததும் நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா

நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார். சமீபத்தில் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.
கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயம் சூர்யா கவனத்திற்கு சென்றதும், அவர் இயக்குனரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா.
கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயம் சூர்யா கவனத்திற்கு சென்றதும், அவர் இயக்குனரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா.
Related Tags :
Next Story