மலை கிராம மக்கள் வாழ்வியல் பேசும் திரில்லர் படம்


மலை கிராம மக்கள் வாழ்வியல் பேசும் திரில்லர் படம்
x
நடிகர்: நபி நந்தி, சரத் நடிகை: சுவாசிகா  டைரக்ஷன்: எஸ்.விஜயசேகரன் இசை: மரியா மனோகர் ஒளிப்பதிவு : ராஜா சி.சேகர்

மலை கிராம மக்கள் வாழ்வியல் பேசும் திரில்லர் படமாக `எவனும் புத்தனில்லை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

`எவனும் புத்தனில்லை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நபி நந்தி, சரத் ஆகியோர் நாயகர்களாகவும் சுவாசிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். சினேகன் கவுரவ வேடத்தில் வருகிறார். பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவகுமார், சுப்புராஜ். எம். கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் போராடும் கிராம மக்களின் கதையாக தயாராகிறது, 7130 அடி உயர மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் படும் இன்னல்களையும் கொண்டு ஜனரஞ்சகமான படமாக உருவாக்கியுள்ளோம்.

ஆக்ஷன், திரில்லர் வகைப் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தில், ஆறு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது'' என்றார். ஒளிப்பதிவு: ராஜா சி.சேகர், இசை: மரியா மனோகர்.


Next Story