மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது


மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2017 10:05 PM GMT (Updated: 12 Jun 2017 10:05 PM GMT)

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பரங்கிபாளையாவில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பெங்களூரு,

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பரங்கிபாளையாவில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த மசாஜ் பார்லருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, அங்கு விபசாரம் நடத்தப்படுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, விபசாரம் நடத்தியதாக கே.ஆர்.புரம் டி.சி.பாளையாவில் வசித்து வரும் ராம்பாபு(வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர் வலுக்கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளிய 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். கைதானவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 700, ஒரு செல்போன், ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story