தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்


தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Aug 2017 10:44 PM GMT (Updated: 12 Aug 2017 10:44 PM GMT)

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தீபாவளி பண்டிகை

வருகிற அக்டோபர் மாதம் 18–ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து, இதர பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் படிவம் ஏ.இ.–5–ல் விண்ணப்பங்கள் 5 நகல்களை பூர்த்தி செய்து, ரூ.2–க்கான நீதிமன்ற கட்டணவில்லை ஒட்ட வேண்டும்.

ஏற்கப்பட மாட்டாது

உரிமக்கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்தியும், கடையின் வரைபடம், புகைப்படம் – 2, வீட்டுவரி ரசீது, வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் அதன் ரசீது நகல், சொந்த கட்டிடம் எனில் வீட்டுவரி ரசீதின் நகல் ஆகியவற்றை சேலம் துணை இயக்குனரின் (சுகாதாரப்பணிகள்) தடையின்மை சான்று ஆகியவற்றுடன் 5 பிரதிகளுடன் செப்டம்பர் மாதம் 8–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

உரிமம் வழங்கிட கேட்டு விண்ணப்பம் செய்வோர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து அத்தகைய ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் செய்திடல் வேண்டும்.

சென்ற ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story