ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம்


ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 11:00 PM GMT (Updated: 17 Dec 2017 7:05 PM GMT)

திருப்பூர் புதிய பஸ்நிலையம் எதிரே ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருப்பூர்,

ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ்நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் ரோசன் ராஜ் தலைமை தாங்கினார்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி போதராஜ், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜோசப், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பின்னர் திருந்திய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவை தொகையை 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணப்பயனாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் அறிவித்தது போல தமிழக அரசு அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story