‘சிவசேனாவுடன் கூட்டணி தொடர்வதையே பா.ஜனதா விரும்புகிறது’ அமித் ஷா பேட்டி


‘சிவசேனாவுடன் கூட்டணி தொடர்வதையே பா.ஜனதா விரும்புகிறது’ அமித் ஷா பேட்டி
x
தினத்தந்தி 7 April 2018 5:02 AM IST (Updated: 7 April 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடைபெற்ற பா.ஜனதாவின் நிறுவன நாள் மாநாட்டில் அதன் தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

மும்பை,

செய்தியாளர் சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்குமா? என அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பது உறுதி. ஆனாலும் நாங்கள் கூட்டணி கட்சிகளையும் எங்களுடன் அரவணைத்துதான் செல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதாக கூறப்படுவது தவறானது. 2014-ம் ஆண்டு முதல் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்துள்ளது. மராட்டியத்தில் சிவசேனா எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரவே பா.ஜனதா விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story