குமாரபாளையத்தில் டீக்கடையில் சாராயம் விற்றவர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல்


குமாரபாளையத்தில் டீக்கடையில் சாராயம் விற்றவர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 20 May 2018 10:15 PM GMT (Updated: 20 May 2018 9:45 PM GMT)

குமாரபாளையம் பாண்டுரங்கன் கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஆறுமுகம் மகன் செல்வம் (வயது 33). இவர் டீக்கடையில் சாராயம் விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

குமாரபாளையம்,

குமாரபாளையம் பாண்டுரங்கன் கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஆறுமுகம் மகன் செல்வம் (வயது 33). இவர் டீக்கடையில் சாராயம் விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், தேவூர் பகுதியில் இருந்து அவர் சாராயம் வாங்கி வந்து விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த ஒரு லிட்டர் கொண்ட 10 சாராய பாட்டில்களையும், அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story