பெண்ணை கொலை செய்ய முயற்சி - கணவர் கைது

பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
மத்திகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவருடைய மனைவி திரிவேணி (28). கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று உடலில் தீக்காயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் திரிவேணி அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தகராறின் போது, தன் உடலில் திரிவேணி மண்எண்ணெயை ஊற்றிய போது, சுரேஷ் தீயால் பற்ற வைத்தது தெரிய வந்தது. திரிவேணி தற்போது ஆபத்தான நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சுரேசை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவருடைய மனைவி திரிவேணி (28). கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று உடலில் தீக்காயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் திரிவேணி அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தகராறின் போது, தன் உடலில் திரிவேணி மண்எண்ணெயை ஊற்றிய போது, சுரேஷ் தீயால் பற்ற வைத்தது தெரிய வந்தது. திரிவேணி தற்போது ஆபத்தான நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சுரேசை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story