புதுக்கோட்டை சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை


புதுக்கோட்டை சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 7:14 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). இவர் தனது மனைவி பார்வதியை குடும்ப பிரச்சினை காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து செந்தில்குமார் புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் சிறையில் உள்ள கலையரங்கத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story