விளையாட சென்ற மாணவர் கடலில் பிணமாக மிதந்தார் - போலீசார் விசாரணை


விளையாட சென்ற மாணவர் கடலில் பிணமாக மிதந்தார் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Aug 2018 10:30 PM GMT (Updated: 24 Aug 2018 8:43 PM GMT)

நாகையில் விளையாட சென்ற மாணவர், கடலில் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை கீச்சாங்குப்பம் சேவா பாரதி குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர். மீனவர். இவருடைய மகன் நித்தீஸ் (வயது 13). இவர் காடம்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் பெற்றோரிடம் விளையாட செல்வதாக நித்தீஸ் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நித்தீசை அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார். அதன் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தீசை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கீச்சாங்குப்பம் கடற்கரையில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நித்தீசின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நித்தீசின் உறவினர்கள் படகில் சென்று உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நித்தீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தீஸ் கடலில் மூழ்கி இறந்தானா? அல்லது வேறு காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story