100 நாள் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


100 நாள் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 2:55 PM GMT)

100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.

நாகர்கோவில்,

100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் தலைமை தாங்கினார். கிருசாந்துமேரி, ராஜதாஸ், சாகுல்ஹமீது உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எபிலைசியஸ் ஜோயல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி போராட்டத்தை முடித்து வைத்தார்.

Next Story