திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி ஊராட்சி சபை கூட்டம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி ஊராட்சி சபை கூட்டம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 29 Dec 2018 11:15 PM GMT (Updated: 29 Dec 2018 10:44 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் வருகிற 8-ந் தேதி நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

திருவாரூர்,

திருவாரூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெற இருந்தது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் காரணமாக ஊராட்சி சபை கூட்டம் வருகிற 8-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) மாற்றப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 8-ந்தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

மாவட்டத்தில் 10 ஊராட்சி சபைகளில் நடைபெற உள்ள கூட்டங்களுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்கள், நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களை சந்திக்கும் ஊராட்சி சபை கூட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story