ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு


ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:16 PM GMT)

ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் தலைவர் சேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெனிட்டோ உள்பட அனைத்து மீனவர்கள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்,

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:–

கடந்த 12–ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகு நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில், அந்த படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்று சிறைவைத்துள்ளனர். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் 2 படகுகள் மூழ்கின. அதில் இருந்த 9 மீனவர்களில் முனியசாமி என்பவர் கடலில் விழுந்து இறந்து விட்டார். மேலும் 8 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இறந்த முனியசாமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முனியசாமியின் உடலை ராமேசுவரம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


Next Story