குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்


குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
x
தினத்தந்தி 15 March 2019 10:30 PM GMT (Updated: 15 March 2019 5:48 PM GMT)

குடும்ப நடத்த வராததால் மனைவியை அரிவாளால் கணவர் வெட்டினார்.

ராஜாக்காடு,

எர்ணாகுளத்தை அடுத்துள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 40). இவருக்கும், இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு பகுதியை சேர்ந்த ஷிஜா (38) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் எர்ணாகுளத்தில் தங்கியிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதனால் ஷிஜா கோபித்து கொண்டு ராஜாக்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் ஷிபு, தனது மனைவியை குடும்பம் நடத்த அழைப்பதற்காக ராஜாகாடுக்கு வந்தார். பின்னர் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஷிஜா மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஷிபு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷிஜாவை வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிவா, அவருடைய மனைவி ஜெகதம்மா ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story