வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 31 March 2019 10:00 PM GMT (Updated: 31 March 2019 7:18 PM GMT)

வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் ஜமாலியா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி வளர்மதி(வயது 40). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு பொம்மனப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story