வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி தகவல்


வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 8:33 PM GMT)

வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தகவல்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்களிக்க செல்லும்போது செல்போன் மற்றும் கேமரா போன்ற மின்னணு சாதனைங்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வசதி, பார்வை குறைபாடு உடையவர் வாக்களிக்க தன்னுடன் ஓர் உதவியாளரை அழைத்து செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வாக்களிப்பதில் முன்னுரிமையும், ஆண், பெண் வாக்காளர்களுக்கென தனித்தனி வரிசைகளும் அமைக்கப்படும். இவ்வரிசையில் வரும் வாக்காளர்களில் ஒரு ஆண் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படும்போது, 2 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story