உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி


உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 19 Sep 2019 10:15 PM GMT (Updated: 19 Sep 2019 9:07 PM GMT)

உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

உத்திரமேரூர்,

புதுச்சேரியை சேர்ந்தவர் ஜியாவுதீன். இவரது மகன் சையத் இப்ராகிம் (வயது 35). இவர் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் 2 நாட்களுக்கு முன்னர் உத்திரமேரூரை அடுத்த நல்லூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த இப்ராகிமை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story