பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 24 Sep 2019 10:45 PM GMT (Updated: 24 Sep 2019 8:59 PM GMT)

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம், 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக் கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி இயற்கை எழில் சூழ மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள்.

இந்நிலையில் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் வழக் கத்தை விட கூடுதலாக தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்துள்ளனர். அருவியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கதவு அடைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. வழக்கமாக காலாண்டு விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவார்கள். இந்தநிலையில் தற்போது அருவியில் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story