காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட தொழிலாளிகள் கைது


காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட தொழிலாளிகள் கைது
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 7:09 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாதமாக வேலைநிறுத்த போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தொழிலாளிகள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுமதியின்றி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 210 தொழிலாளர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story