காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
சங்கரன்கோவில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் மாரிராஜ் மனைவி தங்கமாரி (வயது 26). இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் நேற்று காலை தங்கமாரி மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தங்கமாரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story