புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: மேலும் ஒருவர் கைது


புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2020 3:45 AM IST (Updated: 1 Jan 2020 2:49 AM IST)
t-max-icont-min-icon

புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கருங்கல்,

பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (வயது 26). இவர் பொக்லைன் எந்திர டிரைவர். இவரிடம் திடீரென பண புழக்கம் அதிகமானது. மேலும் அவருக்கு புதையல் கிடைத்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து ஒரு கும்பல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை போலீஸ் உதவியுடன் கடத்தி சென்றது. பின்னர் அவர் தப்பி ஓடி வந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜோன்ஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் ஆசிரியர் சுரேஷ்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புத்தளத்தை சேர்ந்த ராஜா அருள்சிங் (31) என்பவரை நேற்று மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

1 More update

Next Story