திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி புதுப்பட்டினம் மெயின் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செருவாவிடுதி வடக்கு கிராம நிர்வாக அதிகாரி நரேந்திரன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவில்லை.
கொலையா?
இந்த நிலையில் அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி புதுப்பட்டினம் மெயின் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செருவாவிடுதி வடக்கு கிராம நிர்வாக அதிகாரி நரேந்திரன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவில்லை.
கொலையா?
இந்த நிலையில் அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story