சேலத்தில் நடந்து சென்ற தொழிலாளியிடம் நகை, பணம் பறிப்பு - 2 பேரிடம் போலீசார் விசாரணை


சேலத்தில் நடந்து சென்ற தொழிலாளியிடம் நகை, பணம் பறிப்பு - 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 Jan 2020 10:15 PM GMT (Updated: 31 Jan 2020 9:46 PM GMT)

சேலத்தில் நடந்து சென்ற தொழிலாளியிடம் நகை, பணம் பறித்துச்சென்றதாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம், 

சேலம் நரஜோதிப்பட்டி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பேர் வந்தனர். பின்னர் திடீரென்று அவரை வழிமறித்து மிரட்டி, பாக்கெட்டில் இருந்து ரூ.2,500 மற்றும் ஒரு பவுன் நகையை பறித்துக்கொண்டனர்.

பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து சிவகுமார் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டியை சேர்ந்த சுரே‌‌ஷ் (46), செவ்வாய்பேட்டையை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஜீவா (20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது சுரே‌‌ஷ், ஜீவா ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர். எனவே தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

Next Story