கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 8:58 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சேலம் வழியாக செல்லும் ெரயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சூரமங்கலம்,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விமானம் மற்றும் ெரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிக்கும் பணி

அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் ஜங்‌‌ஷன் ெரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ெரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், சேலம் ஜங்‌‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம், டிக்கெட் வழங்கும் மையம், லிப்ட், பயணிகள் காத்திருக்கும் அறை, சுகாதார வளாகம், சுரங்கபாதை, நடைமேடை, தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ெரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே, நேற்று பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ெரயில்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடந்தது.

விழிப்புணர்வு

இதுதவிர, ெரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ெரயில்வே துறை அதிகாரிகளும், ெரயில்வே பாதுகாப்பு போலீசாரும் வினியோகம் செய்து வருகிறார்கள். மேலும், ெரயிலில் பயணம் செய்யும் பயணிகள், முக கவசம் அணிந்து செல்லுமாறு ெரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story