சிவகங்கையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்


சிவகங்கையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 15 April 2020 10:00 PM GMT (Updated: 15 April 2020 9:43 PM GMT)

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

சிவகங்கை, 

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற வந்த சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் பூரண குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். அவர்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது;-

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது போல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் பூரண குணம் அடைந்தனர். இதையொட்டி அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது சிவகங்கை மருத்துவமனையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், ராமநாத புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவ கண்காணிப்பில் இருந்த 41 பேரில், ஏற்கனவே 21 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 17 பேர் மருத்துவ பரிசோதனைக்குபின் நலமுடன் உள்ளதால் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் 3 பேர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மீனாள், துணை இயக்குனர் யசோதாமணி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story