அரவக்குறிச்சியில், பொதுமக்கள் சாலை மறியல்


அரவக்குறிச்சியில், பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2020 12:15 AM GMT (Updated: 16 Jun 2020 12:15 AM GMT)

அரவக்குறிச்சியில், பொதுமக்கள் சாலை மறியல்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சியில் பாவாநகர் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து பாவா நகருக்கு எட்டியாக்கவுண்டனூர், சந்தைப்பேட்டை ரோடு வழியாக சென்று வருகின்றனர். இந்த வழி தூரமாக இருப்பதால், அரவக்குறிச்சி தாராபுரம் ரோடு அருகே உள்ள கேர்நகர் வழியாக செல்ல பாவாநகர் பொதுமக்கள் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு கேர்நகர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாவாநகர் பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று அரவக்குறிச்சி-தாராபுரம் சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story