கரூர் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று; 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்வு


கரூர் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று; 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்வு
x
தினத்தந்தி 22 Aug 2020 11:44 PM GMT (Updated: 22 Aug 2020 11:44 PM GMT)

கரூர் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டாங்கோயில் செல்வநகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண், 33, 37, 48 வயது ஆண்கள் என 4 பேருக்கும், ராம் நகரை சேர்ந்த 24 வயது பெண், 2 வயது குழந்தை, 62 வயது மூதாட்டி என என 3 பேருக்கும், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், 68 வயது மூதாட்டி, பள்ளபட்டியை சேர்ந்த 30 வயது வாலிபர், 22 மற்றும் 27 வயது பெண், சுக்காலியூரை சேர்ந்த 47 வயது ஆண், செங்குந்தபுரத்தை சேர்ந்த 45 வயது பெண், மேட்டுமகதானபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், நங்கவரத்தை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோகைமலை

இதேபோல் டி.என்.பி.எல். காலனியை சேர்ந்த 49 வயது ஆண், செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 22 மற்றும் 29, 55 வயதுடைய 3 பெணகள், வெங்கமேட்டை சேர்ந்த 40 வயது ஆண், 50 வயது பெண், புகளூரை சேர்ந்த 58 மற்றும் 66 வயது ஆண், புதூரை சேர்ந்த 60 வயது ஆண், கரூப்பம்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண், பெரியவரப்பட்டியை சேர்ந்த 57 வயது பெண், சீனிவாசபுரத்தை சேர்ந்த 60 வயது ஆண், தோகமலையை சேர்ந்த 62 வயது ஆண், மணப்பாறையை சேர்ந்த 33 வயது வாலிபர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது பெண், திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரை சேர்ந்த 49 வயது பெண் என மொத்தம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 35 பேரும், வெளி மாவட்டங்களை சேர்ந்த 3 பேர் என 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் பலி

கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதேபோல் 96 வயது முதியவர் கடந்த 17-ந்தேதி நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Next Story