மதுரையில் 4 பேர் உயிரை பறித்த கொரோனா புதிதாக 115 பேருக்கு தொற்று


மதுரையில் 4 பேர் உயிரை பறித்த கொரோனா புதிதாக 115 பேருக்கு தொற்று
x

மதுரையில் மேலும் 4 பேரின் உயிரை கொரோனா பறித்தது. புதிதாக 115 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 96 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 90 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். 85 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குணம் அடைந்தனர். இவர்களுடன் மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 856 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

4 பேர் உயிரிழப்பு

இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 65, 76, 72 வயது முதியவர்கள், 75 வயது மூதாட்டி என 4 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 354 பேர் பலியாகி உள்ளனர். மதுரையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்தது. இந்தநிலையில் 3 தினங்களான 100-க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story