செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 231 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 231 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 2:49 AM GMT (Updated: 23 Sep 2020 2:49 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 231 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் குமரன் நகரை சேர்ந்த 25 வயது இளைஞர், 29 வயது வாலிபர், ஊரப்பாக்கம் பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த 65 வயது முதியவர், வண்டலூர் புத்தர் தெருவில் 34 வயது பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் ஓட்டேரி விரிவு அரிகிருஷ்ணன் தெருவில் வசிக்கும் 61 வயது முதியவர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்டிகை பகுதியில் வசிக்கும் 77 வயது முதியவர், ஆலப்பாக்கம் சாய் நகரை சேர்ந்த 43 வயது பெண், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மகேந்திரா வேல்டு சிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயது பெண், 12 வயது சிறுவன், சுந்தர் தெருவை சேர்ந்த 48 வயது ஆண் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 30 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 223 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 41 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 526 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 281 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 24, 35, வயதுடைய ஆண்கள் எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 25, 23 வயதுடைய ஆண்கள் சோமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 209 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 396 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,105 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 302 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 2 பேர் இறந்துள்ளனர்.

Next Story