திருவள்ளூரில் நேற்று 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


திருவள்ளூரில் நேற்று 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 5 Oct 2020 12:33 AM GMT (Updated: 5 Oct 2020 12:33 AM GMT)

திருவள்ளூரில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 197 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 ஆயிரத்து 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,727 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 560 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்து உள்ளனர்.

Next Story