அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2020 10:34 PM GMT (Updated: 7 Oct 2020 10:34 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி,

நிலுவையில் உள்ள 10 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று 7-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஆல்பர்ட் மார்ட்டின், வின்சென்ட், அந்தோணிசாமி, ஜோசப் பிரிட்டோ, பிரடரிக், வெனிஸ்லகரன், நிக்சன், இருதயராஜ், சேகர், அருள்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story