அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2020 7:31 PM GMT (Updated: 21 Oct 2020 7:31 PM GMT)

விளாத்திகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் டெய்சி, மாநில செயலாளர் சரசுவதி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில், விளாத்திகுளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அங்கன்வாடி ஊழியர்களை அவதூறாக பேசி வருகிறார். ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் மாதம் தோறும் கட்டாய வசூல் செய்கிறார். ஊழியர்களிடையே மோதல் போக்கை தூண்டி வருகிறார். ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story