நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 6:12 AM GMT (Updated: 29 Oct 2020 6:12 AM GMT)

நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

மாற்றி அமைக்கப்பட்ட தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருள்கணபதி, ராஜமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் குமாரதாஸ், மாநில துணைத்தலைவர் கிரிஜா, பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கோஷங்கள்

இதில் அய்யப்பன்பிள்ளை, தேவதாஸ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story