தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு


தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 11 Jan 2021 10:59 PM GMT (Updated: 11 Jan 2021 10:59 PM GMT)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி உள்ளது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி உள்ளது. ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல் வெளிகளில் இருந்து வெளியேறும் நீரால் பொன்னேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து குருவாலப்பர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி பொன்னேரியில் 360 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Next Story