நாமக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி


நாமக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 Feb 2021 12:58 AM GMT (Updated: 1 Feb 2021 1:02 AM GMT)

நாமக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள ராசாகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது பேரன் கிரிதரனை (7) பின்னால் அமர வைத்து கொண்டு சைக்கிளில் கடைக்கு சென்றார். பின்னர் மரூர்பட்டி-ராசாகவுண்டனூர் சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கிரேன் இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவன் கிரிதரன் படுகாயம் அடைந்தான். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதிவேலம்மங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story