சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:02 PM GMT (Updated: 25 Feb 2021 1:02 PM GMT)

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த ஷேக் ஹைதர் அலி (வயது 23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 775 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஷேக் ஹைதர் அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story