காஞ்சீபுரத்தில் பரபரப்பு பஸ் நிலையத்தில் கிடந்த வெடிகுண்டு தேர்தலை சீர்குலைக்க சதியா? போலீசார் விசாரணை


காஞ்சீபுரத்தில் பரபரப்பு பஸ் நிலையத்தில் கிடந்த வெடிகுண்டு தேர்தலை சீர்குலைக்க சதியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2021 11:18 AM IST (Updated: 19 March 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. காய்கறி கடை அருகே வந்த வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பையை அங்கேயே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. கேட்பாரற்று கிடந்த பையை காய்கறி கடைக்காரர் பிரித்து பார்த்த போது அதில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மருந்துகள் நிரப்பப்பட்டு திரி வெளியே தெரியும் அளவுக்கு வெடிகுண்டு இருந்ததை பார்த்தார்.

உடனடியாக காய்கறி கடைக்காரர் அதை எடுத்து அங்குள்ள கால்வாயில் போட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கால்வாயில் இருந்த வெடிகுண்டை எடுத்து பத்திரமாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த பிறகே அது என்ன என்பது தெரிய வரும். தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story