குத்தாலம் அருகே வேனில் கடத்தி வந்த 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்; டிரைவர் கைது


குத்தாலம் அருகே வேனில் கடத்தி வந்த 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 3:51 PM GMT (Updated: 15 April 2021 3:51 PM GMT)

குத்தாலம் அருகே வேனில் கடத்தி வந்த 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்; டிரைவர் கைது.

குத்தாலம், 

குத்தாலம் அரையபுரம் அருகே குத்தாலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசார் வேனை சோதனை செய்தலில் அதில் 1,000 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் சென்னை பெரியதெரு வடக்குப்பட்டுவை சேர்ந்த ராேஜஷ் (வயது 36) என்பவரை கைது செய்து, கடத்தி வந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story