நகை, பணம் திருட்டு

x
தினத்தந்தி 28 Sept 2021 2:37 AM IST (Updated: 28 Sept 2021 2:37 AM IST)
நகை, பணம் திருட்டு
மதுரை
மதுரை கே.கே.நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அவர் ஊரிலிருந்து வீட்டிற்கு வந்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க டாலர், வைர தோடு, 65 ஆயிரம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





